பத்மநாமசுவாமி கோயில் பொக்கிஷத்தின் மர்மத்தை காட்டும் திரைப்படம்!!
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷத்தை மையமாக வைத்து சினிமா தயாரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கோயிலில் மொத்தம் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் 5 அறைகள் திறந்து பார்க்கப்பட்டன. இதில், ஒரு அறையில் மட்டுமே பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருந்தன.
இதுவரை திறக்கப்படாமல் உள்ள மற்றொரு அறையில், இதை விட அதிகமான பொக்கிஷங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த பொக்கிஷங்கள் தொடர்பாக ‘பத்ம வியூகம்‘ என்ற பெயரில் சினிமா தயாரிக்கப் பட்டுள்ளது. பிஜோய் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத் தில் நோபிதரியன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சங்கர் மகாதேவன்உள்ளிட்ட முன் னணி பாடகர்கள் பாடியுள்ளனர். இந்த படம் ஜூலை 6ம் தேதி வெளியாகிறது.
English summary:
Padma swamy temple Treasure trove story taking from one new film.
Filed Under: தமிழ் சினிமா











