டி.ராஜேந்தரின் -”ஒருதலைக் காதல் “-வெற்றி பெறுமா?
ஒருதலை ராகம் போன்று ஒருதலைக் காதலும் வெற்றிப்படமாக அமையும் என்று இயக்குனர், நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகரும், லட்சிய தி்முக தலைவருமானடி. ராஜேந்தர் ஒருதலைக் காதல் என்ற படத்தை எடுத்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பை நெல்லை மாவட்டத்தில் நடத்த இருக்கிறார்.
இதற்காக சங்கரன்கோவிலுக்கு வந்த அவர் சங்கரநாராயணசாமி கோவிலில் வழிபாடு செய்தார்.
பி்ன்னர் அவர் கூறுகையில்,
நான் கடந்த 35 ஆண்டுகளாக ஜோதிட ஆராய்ச்சி செய்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் புதுக்கோட்டை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று பேசினேன்.
இப்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளில் அதி்முக வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார். ஒருதலைக் காதல் படத்தில் நானே கதாநாயகனாக நடித்து வெளியிட இருக்கிறேன்.
இந்த படத்துக்கான ஷூட்டிங் முழுக்க, முழுக்க தேனி, தென்காசி, சங்கரன்கோவில், குற்றாலம் பகுதியில் நடத்தப்படும். அந்த காலத்தில் ஒருதலை ராகம் போல் இந்த படமும் வெற்றிப் படமாக அமையும் என்றார்.
பின்னர் தளவாய்புரத்திலுள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆணையூர் மலைப்பகுதி, நெல்கட்டும்செவல் புலித்தேவர் நினைவு மாளிகை ஆகியவற்றை பார்வையிட்டார்.
English summary:
T.Rajender film by oru thalai kathal .
Filed Under: தமிழ் சினிமா











