நயன்தாராவை நான் காதலிக்கவில்லை!!ஆர்யாவின் பதில்
தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகியாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து எழுந்து தற்போது மீண்டும் நடிக்க வந்து அஜித்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு நயன் சென்றிருக்கிறார்
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் மிக முக்கிய விருந்தாளியாக நயன் நடத்தப்பட்டுள்ளார்
வெல்கம் பேக் நயன்தாரா´ என்று எழுதிய பெரிய கேக் ஒன்று வரவழைக்கப்பட்டு அதனை நயன்தாரா வெட்டியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
இது தொடர்பில் ஆர்யாவிடம் கேட்ட பொழுது எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு ஏராளமான நடிகர், இயக்குநர்கள் என பலரும் வந்திருந்தனர். ஆனால் நயன்தாரா வந்தது மட்டும் செய்தியாகிவிட்டது.
நாங்கள் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிக்கும் போதுதான் நயன்தாரா பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டிருந்தார். அப்போதே நாங்கள் இருவருமே நண்பர்களாக பழகினோம்.
தற்போது காதல் விவகாரத்தால் சற்று மனதளவில் தளர்ந்துபோய் உள்ளார். அவரை உற்சாகப்படுத்தவே அந்த கேக் வரவழைக்கப்பட்டது.
அப்போதும் நாங்கள் நண்பர்கள்தான். இப்போதும் நாங்கள் நண்பர்கள்தான்´ என்று கூறியுள்ளார்.
English summary:
I am not love in nayanthara arya statement
Filed Under: சினிமா கிசு கிசு











