நிஜம் நிழலாகிறது படத்தில் ஸ்டண்ட் நடிகர் ஏற்படுத்திய பரபரப்பு

அகத்தம்மன் பிக்சர்ஸ் சார்பில் ஏ.எம்.ஏ. தயாரித்து வரும் படம், நிஜம் நிழலாகிறது. இந்த படத்தில், கவர்ச்சி நடிகை ப்ளோராவை ஒரு மரத்தில் கட்டி வைத்து வில்லனின் கையாள் எரிப்பது போல் ஒரு காட்சி, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படமாக இருந்தது.
இந்த காட்சியில், ப்ளோராவை உயிருடன் கொளுத்தும் வில்லனின் அடியாளாக ஒரு தெலுங்கு ஸ்டண்ட் நடிகர் நடித்தார். அவருக்கு தமிழ் தெரியாது. ஒரிஜினல் பெட்ரோல் தீப்பந்தத்துடன், ப்ளோராவை நோக்கி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அது அசல் தீப்பந்தம்” என்று சொன்னபின் அவர் அதை கீழே போட்டார். ப்ளோரா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வேகமாக வளர்ந்து வரும் `நிஜம் நிழலாகிறது’ படத்தில் அருள்ராஜ் கதாநாயகனாக நடித்து, படத்துக்கு இசையும் அமைக்கிறார். மற்றும் ஜோதிஷா, லீமா, பஞ்சு சுப்பு ஆகியோருடன் டைரக்டர் செந்தில்நாதன் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டும் செய்கிறார்.
Filed Under: தமிழ் சினிமா










