‘பசுபதி’யுடனா அலறிய நயன்தாரா ….?
உள்ளூர்ல வேணும்னா ஏகாம்பரமா இருக்கலாம். ஆனால் அசலூரை பொறுத்தவரை பல ஹீரோக்கள் உளுத்துப் போன பம்பரம்தான்! இது புரியாத கன்னட மலையாள ஹீரோக்கள் தாறுமாறாக சம்பளம் கேட்பதாக மூக்கு சிந்திக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.
சமீபத்தில் மோகன் என்ற புதுமுக இயக்குனர் மம்முட்டியிடம் கதை சொல்லி தமிழில் நடிக்க கால்ஷீட் கேட்டார். ஒரு கோடி சம்பளம். கேரள வெளியீட்டு உரிமையை அடிஷனலாக தர வேண்டும் என்று சுத்தியலை தலையில் போடாத குறையாக விரட்டிவிட்டாராம் அவர்.
இவரை நம்பி நயன்தாராவிடம் கதை சொல்லி வைத்திருந்தாராம் மோகன். மம்முட்டி என்றால் யோசிக்கலாம் என்று நயன்தாராவும் நம்பிக்கை கொடுத்திருந்தார். மம்முட்டியின் சம்பள மிரட்டலில் எல்லாம் கொலாப்ஸ் ஆகிவிட்டது.
மம்முட்டி இல்லாட்டா என்ன? பசுபதி இருக்காரே என்று அவரிடம் கதை சொல்லி கால்ஷீட்டும் வாங்கிவிட்டார் மோகன். மறுபடியும் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு போனவருக்கு முன் வழுக்கையில் ரெண்டு பல் பதியாத குறை. அலறி தீர்த்துவிட்டாராம் நயன்.
கதர் சட்டை மேல, கரிச்சட்டியை கவுக்கணும்னு நினைச்சா யாருக்குதான் அதிர்ச்சி வராது?
English summary:
Nayanthara not interested from act with pasupathi .
Filed Under: சினிமா கிசு கிசு











