ஹீரோயினை பின் தொடர்ந்த ஹீரோ ..தர்ம அடி கொடுத்த மக்கள் ..?
காதலுக்கு நூறு வருடம் ஆயுள் என்றால், காமத்துக்கு ஐந்தே நிமிடம் என்ற கருவை மையமாக வைத்து, “சித்திரைத்திங்கள்” என்ற படம் தயாராகியிருக்கிறது.
மாரா சில்வர் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஸ்வந்த், நக்கீரன் என்ற இரண்டு கதாநாயகர்களும், ஸ்ரீரேகா, ஸ்வாதி என்ற இரண்டு கதாநாயகிகளும் அறிமுகம் ஆகிறார்கள்.
கதை-திரைக்கதை-வசனம் எழுதி, படத்தை தயாரிப்பதுடன், டைரக்டும் செய்திருக்கிறார், ஆர்.மாணிக்கம். இசை: சரத்பிரியதேவ்.
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது, தூரத்தில் ஒரு மயில் தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. உடனே கதாநாயகி ஸ்ரீரேகா காரை நிறுத்தி, அந்த மயிலை நோக்கி நடந்தார். அவர் தனியாக செல்வதைப் பார்த்த கதாநாயகன் நக்கீரன், பின் தொடர்ந்தார்.
அதை தவறாக புரிந்து கொண்ட கிராமத்து மக்கள், நக்கீரனை அடித்து உதைக்க தொடங்கினார்கள். ஓடிவந்த படக்குழுவினர், மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி, நக்கீரனை விடுவித்தார்கள்.
English summary:
Hero follow heroin,so peoples are problem created from hero .
Filed Under: சினிமா கிசு கிசு











