அனிருத் உறவு பற்றி ஆண்ட்ரியாவின் விளக்கம் …!
நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அனிருத்துக்கு 21 வயதுதான் ஆகிறது. ஆன்ட்ரியா 30 வயதை தொடுகிறார். ‘3’ என்ற பெயரில் வெளியான ஒரே படத்துக்கு மட்டுமே அனிருத் இசையமைத்துள்ளார். அப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய்திஸ் கொலை வெறிடி’ பாடல் ஹிட்டாகி அவரை பிரபலபடுத்தியுள்ளது
ஆன்ட்ரியாவை உதட்டோடு உதடு கடித்து அனிருத் முத்தமிடுவதுபோல் ஆபாசமாக இப்படங்கள் வந்துள்ளன. இவற்றை இன்டர்நெட்டில் பரவ விட்டது யார் என்று தெரியவில்லை.
முத்தக்காட்சி படங்கள் குறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நானும் அனிருத்தும் முத்தமிட்டது 18 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் வந்துள்ளன. அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன். அப்போது எங்களுக்குள் இனிமையான உறவு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் சென்று விட்டோம்.
என்னைப்பற்றி வரும் இதுபோன்ற வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. தொழிலில் மேலும், மேலும் உயர உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு ஆன்ட்ரியா கூறினார்.
English summary:
Aniruth relationship ,andriya statement .
Filed Under: சினிமா கிசு கிசு











